மக்களே, பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதாவது குறையா?… புகார் எண்களை வெளியிட்ட தமிழக அரசு…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் அனைவரும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பொங்கலை கொண்டாடும் விதமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் 3000 ரூபாய் ரொக்க பணம் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இது தவிர இலவச வேட்டி சேலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று பொங்கல் பரிசு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.