கோவா மாநிலம் பொர்வோரிமில் உள்ள மஜுஸ்டிக் பிரைட் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் நாயக் மீது வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ரிசார்ட்டுக்கு வெளியே தனது பாதுகாப்பு அதிகாரியுடன் காரை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது இரவு 8.45 மணியளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தத் தாக்குதலின்போது ஸ்ரீனிவாஸ் நாயக் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார். உடனே விழிப்புடன் செயல்பட்ட அவரது பாதுகாப்பு அதிகாரி பதிலுக்குத் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதல்காரர்கள் அங்கிருந்து தப்பியோடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வடக்கு கோவா காவல் கண்காணிப்பாளர் ஹரிஷ் மக்தாய்கர் தலைமையிலான காவல்துறையினர், கொலையாளி முயற்சிக்கான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சந்தேக நபர்களை அடையாளம் காணவும் அவர்களின் நடமாட்டத்தைக் கண்டறியவும் அப்பகுதி மற்றும் கேசினோ வளாகத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…