இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளானது ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ள நிலையில் இரண்டு அணிகளுக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இரண்டு போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்திருந்தார் . இந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தபோது ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடைகளையும் தாண்டி வந்து மைதானத்திற்குள் ஓடி வந்து விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.
WATCH | Fan invades pitch, ends up at Virat Kohli’s feet during IND vs SA.#IndiavsSouthAfrica #ViratKohli #Cricket pic.twitter.com/iB82lOQH2Q
— The Tatva (@thetatvaindia) December 1, 2025
உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீது அங்கிருந்து வெளியேற்றினார்கள். இந்த நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் காவல் காவலர் ஒருவர் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை .ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசிய உடன் நான் விடுவிக்கப்பட்டேன் என்று அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
