புதிய திருப்பம்.! “அம்மா சொன்ன அந்த வார்த்தை” சீரியல் நடிகை நந்தினி மரணத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்…!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

சின்னத்திரை நடிகை நந்தினியின் தற்கொலை வழக்கில் தற்போது அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில், குடும்பப் பிரச்சனைகள் காரணமாகவே இந்த சோகமான முடிவை எடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், நந்தினியின் தாய் அவரைத் திரையுலகில் இருந்து விலகி நடிப்பைக் கைவிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகத் தெரியவந்துள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நந்தினி, தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.