திருபுவனம் இளைஞர் அஜித் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையில் புதிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அஜித்தின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வயிற்றில் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தியதும் மூளையில் ரத்த கசிவு இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் மேலும் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
