மத்தியப் பிரதேச மாநிலம் கைலாராஸ் பகுதியில், கடும் வெயில் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக லலிதா என்ற ஆசிரியை தனது ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்தார். இதைக் கண்ட அங்கிருந்த இரு இளைஞர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தவறாகக் கருதி, உடனடியாக முதலுதவி என்ற பெயரில் அவருக்குத் தொடர்ந்து ‘சி.பி.ஆர்’ சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். மாறாக, சரியான பயிற்சி இல்லாமல் தவறான முறையில் அவருக்குச் தொடர்ச்சியாக சி.பி.ஆர் வழங்கப்பட்டதால், அவரது இரண்டு விலா எலும்புகள் முறிந்துபோயிருந்தது தெரியவந்தது.
https://twitter.com/MandeepRajBhar9/status/2083139728271167747/video/2
மருத்துவ அவசர காலங்களில் சரியான தகவலும் பயிற்சியும் இல்லாமல் வழங்கப்படும் முதலுதவி, சில நேரங்களில் உயிரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாகப் பெரிய ஆபத்தில் முடிந்துவிடும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது.
