#image_title
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் மேடையில் ஒரு குழந்தைக்கு தன் மகள் வித்யா பெயரை சூட்டி இருக்கின்றார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி, கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர்தான் சோபா சந்திரசேகர். இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை திருமணம் செய்து கொண்ட இவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயை பெற்றெடுத்தார். தனது மகனுடன் சேர்ந்து ஏகப்பட்ட சினிமா பாடல்களை பாடி இருக்கும். இவர் நடிகர் விஜய்யின் நெஞ்சினிலே என்ற திரைப்படத்தில் கதாசிரியராகவும் பணியாற்றி இருக்கின்றார்.
தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருகிறார். விஜய் சமீப காலமாக நடிகர் விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அந்த பிரச்சனை எல்லாம் முடிந்து மீண்டும் குடும்பமாக ஒன்றிணைந்து விட்டனர். நடிகர் விஜய் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் இவர்கள் சண்டை எல்லாம் முடிந்து ஒன்றிணைந்து விட்டார்கள் என்று கூறி வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வந்தது நடிகர் விஜய். தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இதன் மூலம் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். அதற்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருகிறார் நடிகர் விஜய்.
மேலும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களை இரண்டு கட்டங்களாக சந்தித்து உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க இருக்கின்றார். இதை தொடர்ந்து அடுத்த ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்புதான் நடிகர் விஜய் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.
அவரின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை எஸ் சி சந்திரசேகர் மற்றும் தாயார் சோபா சந்திரசேகர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள். அதில் தங்கள் குழந்தைகளுக்கு விஜயின் அப்பா, அம்மா தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு தம்பதி வந்திருந்தார்கள். அவர்கள் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரிடம் தங்களது குழந்தையை கொடுத்து பேர் வைக்க சொன்னார்கள். அந்த குழந்தையை பார்த்த ஷோபா என் பொண்ணு மாதிரியே இருக்கா என்று கூறி வித்யா என பெயர் வைத்திருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்திய அரசு ஊரகப்பகுதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 1 முதல் ‘VB-G RAM G’ எனும் புதிய திட்டத்தை…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சில்கல்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் யுவன், தனியார் கல்லூரியில் பொறியியல்…
தமிழகத்தின் 16-வது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா முன்னிலையில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் அரசுத் துறைகளின் நிதிநிலை குறித்த விரிவான தணிக்கை அறிக்கையைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில் 'மதிப்புமிகு…
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருள் நடிகை திரிஷா தான். தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில்…
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 224 எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR)…