தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதேசமயம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது பல ஊர்களுக்கு ப்ரமோஷனுக்காக சென்று வருகிறார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது சிகப்பு நிற உடையில் ரோஜாவாக ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகிய வருகிறது.

