கவர்ச்சியில் இறங்கிய திரௌபதி பட நடிகை.. குட்டை கவுனில் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..

By Archana on ஆனி 6, 2024

Spread the love

நடிகை ஷீலா ராஜ்குமார் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசான ஆறாவது வசனம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீசான டுலெட் படத்தின் முலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் தேடப்பட்டது. இதனை அடுத்து மண்டேலா, திரௌபதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் ஷீலா நடித்துள்ளார்.

   

இதனை அடுத்து சூப்பர் ஹிட் கும்பலாகி நைட்ஸ் என்ற மலையாள திரைப்படத்திலும் ஷீலா நடித்துள்ளார். படங்கள் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். அடுத்ததாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ஷீலா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

   

 

இவரது எதார்த்தமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பரதநாட்டிய கலைஞரான ஷீலா ராஜ்குமார் கூத்துப்பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷீலா ராஜ்குமார் தனது கணவரை புரிந்து விட்டார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷீலா அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் ஷீலா பகிர்ந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

வழக்கமாக ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிடும் ஷீலா ராஜ்குமார், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து சற்று ஷாக்காக தான் உள்ளார்கள் என்று சொல்லலாம்.