தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக வளம் பெறுபவர்கள் ரஜினி, கமல். என்னதான் கமலஹாசன் திரை துறையில் முதலில் அறிமுகமானாலும் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பால் அவரை விட ஒரு படி முன்னேறி தான் இருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கடந்த 40 ஆண்டுகளாக ரஜினி மற்றும் கமலஹாசன் இணைந்து நடிக்காத நிலையில் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரஜினி கமல் ரசிகர்களின் பேராசை என்றே கூறலாம். அது போன்ற திரைப்படத்தை இயக்க வேண்டும் என்றால் ஒரு பிரம்மாண்ட இயக்குனரால் தான் முடியும். அவர் யாரென்றால் சங்கர்தான். ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் சங்கரிடம் கேட்டாராம்.
நானும் கமல்ஹாசனும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும். அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கின்றதா? உங்களால் கதையை தயார் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை கேட்ட இயக்குனர் சங்கர் கூறியதாவது நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போகிறீர்கள் என்றால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக அதிக அளவில் இருக்கும்.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தின் திரைக்கதை உங்களுக்கும் அவருக்கும் ஒத்துப் போகும் வகையில் இருக்க வேண்டும். அப்படி ஒரு கதை அமைத்து அந்த கதையில் நீங்கள் இருவரும் நடித்தால்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார் சங்கர்.