CINEMA
ஒரே ரஜினி படத்தால் ஓகோன்னு மாறிய வாழ்க்கை.. தயாரிப்பாளராக போட்ட பிள்ளையார் சுழி.. இந்த விஜய் டிவி பிரபலம் தான் ஹீரோவாம்..!!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது பிளமெண்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நெல்சன் தொடங்கி இருக்கிறார்.
நாளை நெல்சன் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்திற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. ரஜினிகாந்தை வைத்து எடுத்த ஜெயிலர் படம் 650 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் நடிகர் கவினை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தை நெல்சன் தனது பிளமெண்ட் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. டாடா படத்திற்கு இசையமைத்த ஜென்மார்ட்டின் தான் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் 48 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே லோகேஷ் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதேபோல நெல்சனும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் இந்த படம் மாபெரும் அளவில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.