நடிகை ஷகிலா, தனது யூடியூப் சேனலில் அடிக்கடி நேர்காணல் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா குழந்தைகளை வயிற்றில் சுமந்த வாடகைத்தாய் என, விஷ்ணு பிரியா என்பவர் பெயர் அடிப்பட்டது. சமூக வலைதளங்களில் அவர், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதையடுத்து, அந்த குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகைத்தாய் இவர்தான் என்பது புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாக பரவி, வைரலானது.
இந்நிலையில், விஷ்ணு பிரியாவை தனக்கு பல ஆண்டுகளாக தெரியும் என்ற அறிமுகத்துடன் அந்த நேர்காணலில், விஷ்ணு பிரியாவிடம் பேசுகிறார். அதில் விஷ்ணு பிரியா என்பவர் கூறுகையில், எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ளது. விக்னேஷ் சிவனின் அம்மா மீனாகுமாரி எனக்கு பல ஆண்டுகளாக பழக்கம். எங்கள் வீட்டுக்கு வருவார். என் குழந்தையை கொஞ்சுவார். மற்றபடி, நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோருடன் எனக்கு பழக்கமில்லை.
ஒருமுறை, காளிகாம்பாள் கோவிலுக்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா வரும் தகவல் கிடைத்தது. மீனாகுமாரி மூலம் அவர்களை சந்தித்த நான், கோவில் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். மற்றபடி அவர்களுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், நான்தான் அவர்களது குழந்தைகளை வாடகைத்தாயாக பெற்றுத் தந்தேன் என்றும், நயன்தாராவுக்கு பதிலாக என் கருமுட்டை வைக்கப்பட்டதாகவும் பல பொய்யான தகவல்களை பரப்பி விட்டனர். உண்மையில், எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கிறாள் என்று கூறி இருக்கிறார் விஷ்ணு பிரியா.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…