கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரில், பிற மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சிறுமிகள் தங்கியிருந்த முகாமிலேயே சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அப்துல் ரசாக் (38) என்பவர், குழந்தைகளைச் சீரழித்ததோடு நில்லாமல், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டியும் வந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குழந்தைகள் நலக் குழுவினர் நடத்திய விரிவான விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்துல் ரசாக்கை அதிரடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…