சென்னை அடையாறு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளரான 50 வயதுடைய பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை அந்தப் பெண் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த 25 வயது உடைய வாலிபர் வண்டியை நிறுத்திவிட்டு நோட்டமிட்டுள்ளார். பிறகு அவர் அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று நகர்ந்து செல்ல கூறியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் அருகில் சென்ற வாலிபர் மிகுந்த ஆபாசமான செய்கைகளை செய்து அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த தூய்மை பணியாளர், அவ சுத்தம் செய்ய கைகளில் வைத்திருந்த துடைப்பத்தை பயன்படுத்தி வாலிபரை தாக்கியுள்ளார். அந்த வாலிபர் அப்பகுதியில் இருந்து உடனே தப்பி சென்று விட்டார். இந்த சம்பவங்கள் அங்கிருந்த காரில் உள்ள சிசிடிவி யில் பதிவாளர் நிலையில் அதனை ஆதாரமாக வைத்து தூய்மை பணியாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அந்த வாலிபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாய் தேஜா என்பது தெரியவந்த நிலையில் பெருங்களத்தூரில் தங்கி போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அவர் இதே போல பலமுறை தனியாக இருக்கும் பெண்களிடம் தவறான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…