தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் முக்கிய பண்டிகையை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் நிம்மதியாக சொந்த ஊருக்கு சென்று திரும்புகிறார்கள்.
இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 21 இன்று முதல் நவம்பர் 23 வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுவரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
