தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான ஒரு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகள் சென்று வரும் வகையில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வார விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 12 நாளை முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, கோவை, திருச்சி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5,000 மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். எனவே ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் உடனடியாக டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள்.
