இளையராஜாவுக்கு விழுந்த பலத்த அடி… அன்னக்கிளி முதல் 134 படங்களின் பாடல்களுக்கு இனி அவர் சொந்தக்காரர் இல்லையா… நீதிமன்றம் போட்ட தடை…!

Spread the love

திரையிசை உலகில் பல தசாப்தங்களாகத் தன் இசையால் ராஜ்யம் நடத்தி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு, காப்புரிமை வழக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு அவர் உரிமை கோர முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், பிரபல இசை நிறுவனமான ‘சரிகம’வுக்கு சாதகமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இளையராஜாவின் இசையில் 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான இந்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கான காப்புரிமை அந்தந்தப் படத் தயாரிப்பாளர்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் தங்களுக்கே சொந்தம் என்று ‘சரிகம இந்தியா லிமிடெட்’ நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால், இந்த பாடல்களை இளையராஜா அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோ சாவன் போன்ற சர்வதேச டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றி வருவாய் ஈட்ட முயன்றதை எதிர்த்தே சரிகம நிறுவனம் இந்த சட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957-ன் படி ஒரு தயாரிப்பாளர் இசையமைப்பாளருக்கு உரிய ஊதியம் வழங்கி இசையை உருவாக்கச் சொல்லும்போது, அந்தப் படைப்பின் முதல் உரிமையாளர் தயாரிப்பாளரே ஆவார் என்ற சரிகம தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். தயாரிப்பாளர்கள் தங்களுக்கிருந்த அந்த சட்டப்பூர்வ உரிமையை சரிகம நிறுவனத்திற்கு முறைப்படி மாற்றிக் கொடுத்துள்ளதால், அதன் மீது இளையராஜா தனிப்பட்ட முறையில் வணிக ரீதியாக உரிமை கொண்டாட முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் ‘மூடுபனி’, ‘நிழல்கள்’, ‘ராஜ பார்வை’, ‘கல்யாணராமன்’ போன்ற இளையராஜாவின் எக்காலத்திற்குமான ஆகச்சிறந்த இசைப் பொக்கிஷங்கள் இந்தத் தடையின் கீழ் வந்துள்ளன. இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு இறுதி நிலையை எட்டும் வரை இந்த 134 படங்களின் பாடல்களை அவர் வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ அல்லது டிஜிட்டல் தளங்கள் மூலம் வருவாய் ஈட்டவோ முடியாது என்பது அவரது ரசிகர்களுக்கும் இசை வட்டாரத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… 8 வயது சிறுமி வசந்தாவிற்கு பாஸ்டர் வீட்டில் நடந்த கொடுமை… அடுத்த நொடியே பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…

3 minutes ago

“எழுத்துத் தேர்வு கிடையாது, ஆன்லைன் எக்ஸாம் மட்டுமே”… Degree முடித்தவர்களுக்கு வங்கியில் 6,715 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…

5 minutes ago

“அந்த சிஸ்டத்தையே மாத்துங்க”…. விஜய்யின் மெகா கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன கம்யூனிஸ்ட்கள்…. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிர்ச்சி திருப்பம்..!

தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…

14 minutes ago

கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி… தூங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில்…

19 minutes ago

60 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை… தமிழக அமைச்சரவையில் மாற்றம்?…. அந்த 7 பேருக்கு கல்தா…. விஜய் கையில் இருக்கும் அந்த ரகசிய லிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய திருப்பமாக, தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக…

21 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…

31 minutes ago