பூமி பிளந்தது.. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்.. வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்.. பதறவைக்கும் வீடியோக்கள்..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 40 நொடிகள் இடைவெளியில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளன. இந்த அதிபயங்கர இயற்கை பேரிடரால் தலைநகர் கராகஸ் மற்றும் வடக்கு வெனிசுலாவின் கடலோர நகரங்கள் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. பல அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுக் கட்டடங்கள் மற்றும் விமான நிலையம் ஆகியவை இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இந்த நிலநடுக்கப் பேரழிவில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், இடிபாடுகளுக்குள் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அச்சம் தெரிவித்துள்ளது. சாலைகள் நடுவே பிளவுகள் ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடங்களுக்குச் செல்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.

   

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வெனிசுலா அரசு நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். வீடுகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான திறந்தவெளிப் பகுதிகளிலும், தற்காலிக முகாம்களிலும் தஞ்சம் புகுந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நகரங்கள் முழுவதும் தற்பொழுது மரண ஓலமும் புழுதிப் படலமும் சூழ்ந்து காணப்படுகிறது.