#image_title
பிரபல சீரியல் நடிகையும் டான்ஸருமான சுபிக்ஷா நீதானே என் பொன்வசந்தம் சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு கொற்றவை என்ற படத்தில் நடித்தார். பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரஜினி சீரியலிலும் நடித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சுபிக்ஷா மானஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக மானஸ் சீரியல் நடிகை ஆலியா மானசாவை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஆல்யா தனது காதலரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆல்யா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். சஞ்சீவ் கயல் சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் தான் ஆல்யா சஞ்சீவ் தம்பதியினர் 1.50 கோடி ரூபாய் செலவில் தங்களது கனவு இல்லத்தை கட்டி முடித்தனர்.
ஆல்யாவை விட்டு பிரிந்த பிறகு தான் மானஸ் சுபிக்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மானஸ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பல்வேறு திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே சுபிக்ஷா தனது கணவர் மானசை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
மேலும் சமூக வலைதளத்தில் தனது கணவர் மானசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் நீக்கிவிட்டார். நேற்று கேரளாவை சேர்ந்த தொழிலதிபரான அவினாஷ் வாசுதேவன் என்பவரை சுபிக்ஷா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சுபிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#image_title
ஃபதேகஞ்ச் பகுதியில் நள்ளிரவில் வீதியோரம் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன், பொதுமக்களின் உதவியுடன் தற்போது அப்பகுதியில் உள்ள காவல்…
காஸ்கஞ்ச் பகுதியில் கங்கையில் நீராடி, புனித நீர் எடுத்துக்கொண்டு டிராக்டர் டிராலியில் திரும்பிக் கொண்டிருந்த காவடி பக்தர்கள் குழுவில் ஒரு…
சங்காரெட்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் எழுதிய உருக்கமான தற்கொலை கடிதம் மீட்கப்பட்டு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "எனக்கு வாழ நம்பிக்கை…
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார்.…
ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…