‘3 நாளைக்கு முன்னாடி தான்’… மறைந்த நடிகர் மாரிமுத்து குறித்து சீரியல் நடிகை செந்தில் குமாரி பகிர்ந்த வீடியோ… ஷாக்கில் ரசிகர்கள்…

By Begam

Published on:

தமிழில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் செந்தில்குமாரி. பசங்க திரைப்படத்தில் அன்பான அம்மாவாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

   

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்ட இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் விஜய் டிவி முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியலிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது 40 வயதுக்கு மேலாகும் இவர் சீரியல் மற்றும் படங்களில் அம்மா கதாபாத்திரம் மற்றும் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், இன்று மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் அவர் ‘3 நாளைக்கு முன்பு இந்த வீடியோவை ஷூட் செய்ததாகவும்,  வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றது. இவ்வளவு உற்சாகமான நபரை நாங்கள் தவறவிட்டு விட்டோம் என்றும், Rip sir’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by senthi kumari???? (@senthi_kumari15)