சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தம் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். சென்னை பிராட்வேயை சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி சதீஷ் என்பவரை காதலித்து 24 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில் கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராருக்கு பிறகு ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு மறுநாள் காலை சைதாப்பேட்டையில் உள்ள தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி நேற்று இரவு தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது. நடிகர்…
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக விளங்கும் புதன் பகவான், மே 2026-ல் தனது இடத்தைப் மாற்றுகிறார். இந்த…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பத்தை நடிகர் விஜய் ஏற்படுத்தியுள்ளார். முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்த…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் அரங்கேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், நடிகர்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து, நடிகர் விஜய் முதலமைச்சராகப்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விஜய் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து…