போதைப் பொருள் வைத்திருந்த சன் டிவி சீரியல் நடிகை.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

By Nanthini on கார்த்திகை 9, 2024

Spread the love

மிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு, காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை. பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஹோட்டலில் வைத்து நடிகை மீனா அதிரடி கைது

   

இந்த நிலையில் சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை மீனா. இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு இவர் வந்துள்ளார். அப்போது அவரிடம் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் உடனே போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

   

5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் வைத்திருந்ததாக சுந்தரி சீரியல் நடிகை சென்னையில் கைது | Sun Tv Sundari serial actress Meena arrested for possession of Methamphetamine drug ...

 

அங்கு மீனாவிடம் சோதனை இட்டபோது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற அதிக வீரியம் கொண்ட போதை பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை உடனே கைது செய்தனர். இவர் யாரிடம் எங்கு இருந்து அந்த போதை பொருளை வாங்கினார் வேறு யாரிடமாவது போதைப்பொருளை விற்பனை செய்து உள்ளாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.