விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேன்மொழி பி ஏ, நாம் இருவர் நமக்கு இருவர் என முன்னணி சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை அஸ்ரிதா ஸ்ரீதாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர்.ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவரது தந்தை புரொடக்ஷன் மேனேஜர். அம்மா புஷ்பாவும் சீரியல் நடிகை தான்.
நடிகை அஸ்ரிதா தனது 3 வயதில் திரைப்பயணத்தை தொடங்கியவர். முதன்முதலில் ‘அப்பா அம்மா ‘என்ற சீரியலின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். சீரியலில் மட்டுமின்றி 35க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் ‘கடல் கடந்த காவியம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சம்டைம்ஸ், தெகிடி, திருமணம் என்னும் நிக்கா, ஆறாவது சினம், சில நிமிடங்களில், என்னை அறிந்தால், சிக்ஸர், கொரில்லா, வனமகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் விஜய் டிவியின் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ராகினி என்ற வில்லி ரோலில் நடித்து வருகிறார் அஸ்ரிதா . முதலில் பாசிட்டிவ் ரோலாக இருந்தாலும் தற்போது வில்லன் கணவர் உடன் சேர்ந்துகொண்டு ராகினி ரோலும் வில்லியாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஹோம்லியாக காட்டப்பட்ட அஸ்ரிதா தற்போது வில்லியாக மாறி இருப்பதால் தொடரில் சிக்கல்களும் வர இருக்கிறது.
தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார் அஸ்ரிதா. இந்நிலையில் இவர் தனது சிறுவயதில் பிரபல நடிகர் நாகேஷ் அவர்களுடன் இணைந்து நடித்த தனது முதல் சீரியலான ‘அம்மா அப்பா’ தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அவரா இது..?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.