கரூர் விபத்து வழக்கில் நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 41 பேர் பலியான இந்த வழக்கில் விசாரணை வளையத்திற்குள் செந்தில் பாலாஜி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவர் அந்த சம்மனைப் பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, தனது வழக்கறிஞர் குழுவுடன் நள்ளிரவில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவிருக்கும் தேர்தல் சூழலில் நடிகர் விஜய்க்கு சிபிஐ மூலம் நெருக்கடி கொடுக்கப்படுவதாக ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில், தற்போது செந்தில் பாலாஜி மீதான இந்த அதிரடி நடவடிக்கை திமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
