தவெக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் பேசிய விவகாரத்தில், போலீசாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது அடுத்தகட்ட நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய நிலையில் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய இருவரும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால், உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த இக்கட்டான சூழலில் ஆளும் திமுக தலைமை தங்களை முழுமையாகக் கைவிட்டு, இந்த விவகாரத்திலிருந்து முற்றிலும் ஒதுங்கி நிற்பது செந்தில்பாலாஜி தரப்பினருக்கு அதிர்ச்சியையும், கடும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
