தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மீது அடுத்தகட்டமாக கைது நடவடிக்கை பாயலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இருவருக்கும் காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர்களோ அல்லது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களோ விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தியடைந்துள்ள காவல்துறையினர், சட்டப்பூர்வமாக அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
