மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தற்போது நாட்டின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் அமித்ஷா, புதிய மாற்றங்களின்படி துணைப் பிரதமராக நியமிக்கப்படலாம் எனப் பலத்த பேச்சுகள் அடிபடுகின்றன.
இதற்கு முன்னதாக, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை எல்.கே. அத்வானி துணைப் பிரதமராகப் பதவி வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் இந்தச் சாத்தியமான பதவி உயர்வு ஒருபுறமிருக்க, மகாராஷ்டிராவில் கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு இந்த அமைச்சரவை மாற்றத்தில் கூடுதல் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத் துறைகள் வழங்கப்படலாம் என்றும் தற்போதைய டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
