தமிழகத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் வந்துள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இருமுறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வந்தார். இதனைத் தொடர்ந்து ஜாமின் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி அவர் தாக்கல் செய்த மனு இந்தூர் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் தேவையான போது மட்டும் நோட்டிஸ் அனுப்பி செந்தில் பாலாஜியை ஆஜராக செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் விதிகளை மீறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கு. தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்து இருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
