தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் அதிமுக, தவெக போன்ற கட்சிகள் ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. இந்நிலையில் கரூர் துயர துயருக்குப் பிறகு மத்திய உளவுத்துறை எடுத்த சர்வேயில், திமுக கூட்டணி 90 இடங்களிலும், தமிழக வெற்றி கழகம் 70 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அதிமுக கூட்டணி 35 இடங்களிலும், நாதக 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றது என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, வட மற்றும் தென் மாவட்டங்களில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், மீதமுள்ள 38 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகவும் இந்த சர்வே கூறுகிறது.
