பெங்களூரு உத்தரஹள்ளியில் வசித்தவர் நேத்ராவதி. 34 வயதான இவருடைய கணவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் இவர் தன்னுடைய பதினைந்து வயது மகளுடன் வாழ்ந்து வந்தாலர், சிறுமி தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 26ம் தேதி காலை வீட்டின் படுக்கை அறையில் சிறுமியின் தாய் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். குடும்ப தகராறு தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதிய நிலையில் நேத்ராவதியின் அக்கா அனிதா காவல் நிலையத்தில் தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளது, அவர் இறந்த நாளிலிருந்து அவருடைய மகளை காணவில்லை என்று கூறியிருந்தார்.
இதனால் போலீசார் நேத்ராவதியின் மகளை தேட ஆரம்பித்தார்கள். அவர் அவருடைய தோழியின் வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது. அங்கு சென்ற போலீசார் அந்த சிறுமியை பிடித்து விசாரித்தார்கள். அப்போது அந்த பெண் 15 வயதான ஆண் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து தன்னுடைய தாயை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் மற்றும் ஆண் நண்பர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
கொலையான நேத்ராவதியின் 15 வயது மகளுக்கு அவர் வயதைச் சேர்ந்த சிறுவனோடு காதலன் இருந்தது. 25ஆம் தேதி இரவில் நேத்ராவதி தூங்கியதும் அவருடைய மகள் காதலரை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அப்போது காதலனுடன் இருந்த தன்னுடைய மகளை நேத்ராவதி அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி தன்னுடைய காதலன் அவருடைய நண்பர்களோடு சேர்ந்து தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…