இடைத்தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…! இடதுசாரிகளுக்கு சீமான் ஆதரவு…? அனல் பறக்கும் அதிரடி பேச்சு…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

தமிழக இடைத்தேர்தல் களம் சுடச்சுட சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன என்ற முடிவை நாங்கள் முழு மனதாக வரவேற்கிறோம். ஆனால், இந்த முடிவை அவர்கள் காலம் தாழ்த்தி எடுத்துள்ளனர். தனித்துப் போட்டியிடும் முடிவை முன்பே அறிவித்திருந்தால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்திருக்காது. அவர்களுக்கு எங்களது முழு ஆதரவையும் தந்திருப்போம்” எனத் தெரிவித்து மாபெரும் அரசியல் ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பாகத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், சீமானின் இந்த திடீர் ஆதரவுப் பேச்சு பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராகக் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துக் களமிறங்கியுள்ள நிலையில், தற்போது ஐந்து முனைப் போட்டியாக மாறியுள்ள இடைத்தேர்தல் களம் மேலும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.