நடிகை விஜயலட்சுமி வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜயலட்சுமி உடன் சுமுகமாக செல்வதற்கான உத்திரவாதத்தை சீமான் வழங்க வேண்டும். மன்னிப்பு கோரவில்லை என்றால் சீமான் மனுவை ஏற்க மாட்டோம் என்றும் சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
