நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு SC-யில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நடிகை தொடர்பாக தன்னுடைய அனைத்து கருத்துகளையும், பேட்டிகளையும் திரும்ப பெறுவதாகவும், நடிகைக்கு எதிராக ஊடகங்களில் இனி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், அந்த நடிகை தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
