“அவரை உள்ள தள்ளுங்க”… போலீசுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ரகசிய உத்தரவு… கசிந்த பின்னணி…!

By SATHISH R on ஆடி 5, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கரூர் சம்பவத்தின் பின்னணியில், முதலமைச்சர் விஜய்க்கும் செந்தில் பாலாஜி தரப்பிற்கும் இடையேயான அரசியல் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் கரூரில் நடந்த சில நிகழ்வுகளில், திமுக தன்னை திட்டமிட்டுப் பலிகாடாக்கியதாக முதலமைச்சர் விஜய் கருதுகிறார். இந்தத் தீவிரமான கோபத்தை அவர் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்; சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசும்போது கூட, “கரூர் சம்பவத்தில் என்னை ஏன் தேவையில்லாமல் குற்றம் சாட்டினீர்கள்?” என நேரடியாகவே கேள்வி எழுப்பியிருந்தார். இந்த அரசியல் பகையே தற்போதைய அதிரடி நடவடிக்கைகளுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை எவ்வாறாவது கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி கைதான நபர்கள் அனைவரும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் அவரின் நெருங்கிய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக காவல்துறை, இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை உடனடியாகக் கைது செய்யத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

   

இருப்பினும், தங்களைக் கைது செய்ய காவல்துறை வலைவீசித் தேடுவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் தற்போது திடீரெனத் தலைமறைவாகியுள்ளனர். இதற்கிடையில், முதல்வர் விஜய் விரைவில் கரூருக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதனால், “நான் கரூருக்கு நேரில் செல்லும்போது, தவெக ஆட்சியை அசைக்கப் பார்த்த செந்தில் பாலாஜி கண்டிப்பாகச் சிறைக்குள் இருக்க வேண்டும்” என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.