#image_title
இந்தியா முழுவதற்கும் ஒரே சூப்பர் ஸ்டராக 70 மற்றும் 80 களில் விளங்கியவர் நடிகர் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் நேரடியாக ஒரு தென்னிந்திய மொழிப் படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால் அவர் நடித்த ஷோலே உள்ளிட்ட படங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
75 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படம் தமிழ்நாட்டில் இந்தியிலேயே வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேல் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. தமிழ்ப் படங்களின் வசூலை எல்லாம் முறியடித்துள்ளது. அப்படி இந்த படம் ஓடியதற்கு அமிதாப் பச்சன் மட்டும் காரணம் இல்லை. இன்னும் இரண்டு பேரும் முக்கியக் காரணம். அவர்கள்தான் திரைக்கதை ஆசிரியர்களான சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர்.
இவர்கள்தான் 70 களில் ஆங்ரி யங் மேன் –(கோபக்கார இளைஞன்) எனும் ஹீரோவை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன்னர் வரை இந்திய சினிமாவின் கதாநாயகன் காதல் நாயகன் ஆகவும் மென்மையான மனம் கொண்டவனாகவும், எந்தவிதமான புரட்சிகர சிந்தனைகளும் இல்லாதவனாக இருப்பான். ஆனால் நாடு அப்போதிருந்த அரசியல் சூழலால் இளைஞர்கள் மத்தியில் இருந்த நெருப்பை தங்கள் கதாபாத்திரமாக உருவாக்கினார் சலிம் – ஜாவேத்.
அப்படி உருவாக்கிய பல பாத்திரங்களில் அமிதாப் பச்சன் நடித்தார். அப்படிப்பட்ட இந்த பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு விஜய் என்றுதான் அவர்கள் பெயர் வைத்தார்கள். இப்படி அவர்கள் உருவாக்கிய திரைக்கதைகள் அமிதாப் பச்சனை சூப்பர் ஸ்டாராக ஆக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களையும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களாக்கியது.
எப்படி என்றால் ஒரு கட்டத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக இருந்த அமிதாப் பச்சன், ஒரு படத்துக்கு 20 லட்சம் சம்பளம் வாங்கினார்கள் என்றால் தங்களுக்கு 21 லட்சம் ரூபாய் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் டிமாண்ட் செய்யும் அளவுக்கு அவர்களின் மார்க்கெட் இருந்துள்ளது. கேட்டது மட்டும் இல்லாமல் அப்படி பெறவும் செய்துள்ளார்கள் என்பதுதான் இதில் வியப்பான விஷயம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…