நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு காரணமாக, கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பக்கபலமாக இருக்க தமிழக அரசு ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. மறுதேர்வை எதிர்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு நீட் பயிற்சி வழங்குவதற்காக, கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாகவே, நாளை முதல் (மே 23) பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நாளை தொடங்கி ஜூன் 11-ஆம் தேதி வரை தொய்வின்றி நடத்துவதற்கும், இதற்கான தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உடனடியாக மேற்கொள்வதற்கும் பள்ளிக் கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த விரைவான நடவடிக்கை, தேர்வு குளறுபடிகளால் கவலையடைந்திருந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் தந்துள்ளது.
