“நீயும் ஒரு பொம்பள பிள்ளைக்கு தந்தை தானே” இப்படி செய்ய எப்படி மனசு வந்துச்சு..? 9-ம் வகுப்பு மாணவியைச் சீரழித்த பள்ளி வேன் ஓட்டுநர்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்..!!

By Soundarya on தை 23, 2026

Spread the love
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவரே 14 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜ்கோட்டின் மால்வியாநகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் அந்த மாணவியைப் பள்ளி வேன் ஓட்டுநரான ரமேஷ் காரா (35), ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்தத் துரோகத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்கோட் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரமேஷ் காராவை உடனடியாகக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் காராவிற்கு ஏற்கனவே 12 வயதில் ஒரு மகள் உள்ளார். தனது மகளின் வயதையொத்த ஒரு சிறுமிக்கு எதிராக, அதுவும் மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஒரு ஓட்டுநரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைதான ஓட்டுநரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த கேள்விகளை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.