“அம்மா இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்”… 3 வருடமாக பள்ளி மாணவிகளை சீரழித்த ஆசிரியர்… கதறி அழுத மாணவி… நாட்டையே நடுங்க வைக்கும் பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வரும் நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றன. இங்கு சமூக அறிவியல் ஆசிரியராக ஜலபதி என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் வகுப்பறைக்கு செல்லும் போது மாணவிகளை பாராட்டுவது போல பாலியல் சீண்டரில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சைலஜா என்பவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ஜலபதி அந்த சிறுமியை பள்ளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் மாணவியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நிலையில் மாணவியை மிரட்டி வெளியில் அழைத்துச் சென்ற ஆசிரியர் ஆள் நடமாட்டம் இல்லாத மறைமுகமான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைப் போல கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து மாணவியை மிரட்டி வெளியில் அழைத்துச் சென்று சித்திரவதை செய்து வந்திருக்கிறார். தற்போது 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சைலஜா இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

   

எனவே மாணவியிடம் பெற்றோர்கள் கண்டித்து கேட்ட நிலையில் ஆசிரியர் தனக்கு செய்த கொடுமையை அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே போலீசீர் புகார் அளித்த நிலையில் போலீசார் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சைலஜா மட்டுமல்லாமல் பல மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. எனவே பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை நேரடியாக பள்ளிக்குச் சென்று கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிறகு அவரை திருப்பதியின் முக்கிய வீதிகளில் நடக்க வைத்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது