டெல்லியின் புத் விகார் பகுதியில் உள்ள சி.எம். மாடல் என்ற தனியார் பள்ளியில் தனது மகனின் இடமாற்றச் சான்றிதழைப் பெறச் சென்ற தந்தையிடம், அனைத்துக் கட்டணங்களும் ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்த நிலையிலும் கூடுதல் தொகையாக 200 ரூபாய் கோரப்பட்டது. அதை வாங்கிய பிறகே சான்றிதழைத் தருவதாகப் முதல்வர் கூறியதால், அந்தத் தந்தை பணத்தைக் கொடுத்துவிட்டு ஏன் இந்த கூடுதல் கட்டணம் என்று கேள்வி எழுப்பத் தொடங்கினார்.
அவர் தனது கைப்பேசியில் இதைப் படம்பிடித்துக் கொண்டே நியாயமாகக் கேள்வி கேட்கத் தொடங்கியதும், பதற்றமடைந்த பள்ளி நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக வாங்கிய 200 ரூபாயை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது. இருப்பினும், இந்த முழுச் சம்பவத்தையும் பதிவு செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்வி நிலையங்கள் வியாபார மையங்களாக மாறிவருவதைக் சுட்டிக்காட்டி இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் வசூலிக்கும் இதுபோன்ற தனியார் பள்ளிகள் மற்றும் முதல்வர் மீது டெல்லி கல்வித் துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
