சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்பூரில் உள்ள மொஹல்லா பட்டி டோலாவில், இரண்டு சகோதரிகள் மீது பள்ளிப் பேருந்து மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூர் சிட்டி காலனியில் வசிக்கும் சாக்கு வியாபாரி முகமது ஆரிப்பின் மகள்கள் சகோதரிகள். அவர்களின் பெயர்கள் அனபியா (7) மற்றும் ஜன்னத் (4). அவர்கள் மில்டன் கல்வி அகாடமியில் படித்தனர். அனபியா 1 ஆம் வகுப்பும், ஜன்னத் எல்கேஜியும் படித்தனர். இவர்கள் மீது பள்ளி பேருந்து ஏறியதில் இந்த விபத்தில் மூத்த சகோதரி உடனடியாக இறந்தார்.
A tragic accident took place in #Rampur when a school bus ran over two young sisters.
The elder girl died on the spot, while the younger one survived with minor injuries.
CCTV footage shows that the girls were crossing the road after getting off the bus when the vehicle turned… pic.twitter.com/0CjUTSqPy4
— Hate Detector 🔍 (@HateDetectors) December 1, 2025
தங்கைக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரண்டு சிறுமிகளும் பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கி கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதை வீடியோ காட்டுகிறது. பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் பேருந்தை விட்டு கீழே இறங்கி சிறுமிகள் பேருந்தில் முன்பக்கமாக சாலையை கடந்துள்ளார்கள். அப்போது ஓட்டுநர் முன்பக்கத்தை சரிபார்க்காமல் பேருந்தை முன்னோக்கி நகர்த்தினார். இதில் இரண்டு சிறுமிகளும் சக்கரங்களுக்கு அடியில் சிக்கினர். அருகிலுள்ளவர்கள் அவர்களுக்கு உதவ விரைந்தனர்.
ஆனால் அதற்குள் அனபியா உயிரிழந்தார். இளைய சகோதரி ஜன்னத் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அனபியாவின் தந்தை ஆரிஃப் கூறுகையில், ஒரு மகள் இறந்துவிட்டார், மற்றொரு மகள் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை என்றும் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
