#image_title
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.
சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான். அவர் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்தர். ஆனால் அதுவே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து பிராப்தம் என்ற பெயரில் சிவாஜி கணேசனை வைத்து படம் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் படுதோல்வி அடைந்தது. அதனால் அந்த கடன் பிரச்சனைகளைத் தீர்க்க அடுத்தடுத்து சில படங்களை தயாரித்தார். ஆனால் அனைத்தும் அவருக்கு தோல்வியையேக் கொடுத்தன. இதனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலனைக் கெடுத்துக் கொண்டார்.
இந்த படம் எடுப்பதற்கு முன்பே அவரின் கணவரான ஜெமினி கணேசன் படம் இயக்கி தயாரிக்காதே எனக் கூறியுள்ளார். ஆனால் அவர்களுக்குள் அப்போது கருத்து வேறுபாடு இருந்ததால் சாவித்ரி அவர் பேச்சைக் கேட்கவில்லை. அதனால் ஜெமினி கணேசனும் ஒதுங்கிக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் கண்ணதாசன் சாவித்ரியிடம் “நான் படம் எடுத்தபோது என்னருகே இருந்தவர்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினார்கள். கடைசியால் நான் காலியானேன். உன் பக்கத்தில் இப்போது இருப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். அதனால் சொந்தப் படம் மட்டும் எடுக்காதே” எனக் கூறியுள்ளார். ஆனால் சாவித்ரி அவரின் பேச்சையும் கேட்கவில்லை.
தமிழ் சினிமாவில் நல்ல கலைஞர்களாக இருந்தும் சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் கையை சுட்டுக்கொண்டு வீழ்ச்சியை சந்தித்தவர்கள் இருவர். ஒருவர் சந்திரபாபு மற்றொருவர் நடிகையர் திலகம் சாவித்ரி.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…