Categories: சினிமா

சூப்பர் ஸ்டாரை கண்டபடி விமர்சித்த நடிகர் இப்போது ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கப்போகிறாரா?  என்னப்பா சொல்றீங்க?

Spread the love

ரஜினிகாந்த் தற்போது தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், துசாரா விஜயன் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளிவரவுள்ளது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171 ஆவது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் கைக்கோர்க்கவுள்ளார். இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் “தலைவர் 171” திரைப்படத்தில் மேலும் ஒரு முக்கிய நடிகர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்துடன் 80களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எனினும் ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக பல மேடைகளில் கடுமையாக விமர்சித்து பேசியவர் இவர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவே இல்லை. ஒரு முறை ஒரு இயக்குனர் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்க அவரை அணுகியபோது, “வேண்டுமென்றால் ரஜினிகாந்தை என்னுடைய படத்தில் வில்லனாக நடிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினாராம். அந்தளவுக்கு ரஜினிகாந்த் மீது விமர்சனப் பார்வை கொண்டவர் இவர்.

இந்த நிலையில் “தலைவர் 171” திரைப்படத்தில் அந்த நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகர்தான் சத்யராஜ்.

சத்யராஜ் ரஜினிகாந்துடன் இணைந்து “பாயும் புலி”, “மிஸ்டர் பாரத்”, “மூன்று முகம்”, நான் சிகப்பு மனிதன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதன் பின் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் நடிக்கவே இல்லை. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் சத்யராஜ் “தலைவர் 171” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Arun

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago