#image_title
சுப்ரமண்யபுரம் என்ற கல்ட் கிளாசிக் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தின் வெற்றியில் நடிகர் சசிகுமார் வெற்றி பெற, இயக்குனர் சசிகுமாருக்கு நீண்ட ஓய்வை கொடுத்துவிட்டார்.
அதன் பின்னர் அவர் ஈசன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் என அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கியாரண்டி நடிகராக உருவானார்.
அவர் நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட்டானதும், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபகாலமாக அவர் படங்கள் எதுவும் ஹிட்டாகாத நிலையில் சமீபத்தில் அயோத்தி மற்றும் நந்தன் ஆகிய கதையம்சம் உள்ள படங்கள் மூலமாகக் கம்பேக் கொடுத்துள்ளார்.
சசிகுமார் தமிழ் சினிமாவில் முதல் முதலாக அறிமுகமானது பாலாவின் சேது படம் மூலமாகதான். அந்த படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சசிகுமார், அதன்பின்னர் நந்தா படத்திலும் பணியாற்றினார். அதன் பின்னர் இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே தொடங்கியதும் அவருடன் இணைந்துகொண்டார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் ஏன் தொடர்ந்து பாலாவிடமே வேலை செய்யாமல் அமீரிடம் வந்தார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “பாலா சார் மீது எப்போதுமே மரியாதையும் ஒரு பயமும் இருந்தது. ஆனால் அமிர் அண்ணன் அப்படி அல்ல. அவரிடம் ஒரு நட்புணர்வும் சகோதரத்துவமும் இருந்தது. அதனால் அவருடன் வந்துவிட்டேன். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.
இது சினிமாவில் இயல்பாக நடப்பதுதான். பாக்யராஜ் சார் முந்தானை முடிச்சு பண்ணும் பாண்டியராஜன் சார் தனியாகப் படம் பண்ண சென்றதும் ஜி எம் குமார், லிவிங்ஸ்டன் எல்லாம் சென்றுவிட்டதாக பாக்யராஜ் சார் ஒரு நேர்கானலில் கூறினார். அதுபோலதான்” எனப் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…