தமிழ் சின்னத்திரையில் எப்போதுமே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். குறிப்பாக பாடல்களை மையப்படுத்தி சூப்பர் சிங்கர் மற்றும் சரிகமப நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதனை ரசிக்க மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் வித்தியாசமான கான்செப்ட் உடன் சூப்பர் சிங்கர் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. மக்களுக்கு இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ஜீ தமிழின் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் பாடி கொண்டிருக்கும்போதே அவருடைய வீட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் Dedication Round நடைபெற்றது. இதில் போட்டியாளர் அருண் தன்னுடைய அம்மாவிற்காக பாடல் ஒன்றை பாடி சமர்ப்பித்தார். அவர் பாடி முடித்த பிறகு தொகுப்பாளினை அர்ச்சனா அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை பகிர்ந்து கொண்டார். அதாவது அருண் பாடி கொண்டிருக்கும்போதே அவருடைய பாட்டி இறந்துவிட்டாராம்.
இந்த செய்தியை அருணிடம் சொல்ல வேண்டாம் என்று அவருடைய தாய் மறைத்துள்ளார். பாடி முடித்த பிறகு அவரிடம் தொகுப்பாளினி இந்த விஷயம் குறித்து கூற அனைவரும் சோகத்தில் மூழ்கி விட்டன. பிறகு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்திய நிலையில் அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…