தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சிறுவர்களுக்கான சீசன் முடிவடைந்த வேகத்தில் சீனியர்களுக்கான ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இலங்கையில் இருந்து வந்த சினேகா என்ற பெண் பாடும் பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளது. ஆனால் சினேகா வேறொரு பாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றபோது வசதியானவர் போல் காணப்பட்டார். இதில் வசதி இல்லாத குடும்பமாக காட்டப்படுகிறார் என நிறைய விமர்சனங்கள் எழுந்தது.
இப்படியான நிலையில் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் பாடவந்த சினேகா மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளார். அவருக்கு மொத்தமாகவே நான்கு துணிகள் தான் இருக்கின்றதாம். வறுமையில் வாடும் இவர் இந்த நிகழ்ச்சிக்கு கூட அப்பா அம்மா இல்லாமல் தனியாகத்தான் வந்திருக்கிறார். அவர் உடை இல்லை என்று சொன்னதும் பாடகி ஸ்வேதா நாம் கண்டிப்பாக ஷாப்பிங் செல்வோம் என்று கூறியுள்ளார். அவரது அம்மா உடல்நலக்குறைவால் வீட்டில் இருக்கும் நிலையில் அப்பாவின் சம்பளத்தில் தான் மொத்த குடும்பமும் வாழ்கின்றது. இலங்கையில் உள்ள அவரது ஊர் மக்கள் சினேகா குறித்தும் அவர்கள் படும் கஷ்டம் குறித்தும் பேச அவர் அப்படியே எமோஷனல் ஆகியுள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
