மொத்த தியேட்டரையும் தூக்கியும் வேலைக்கு ஆகல… கடைசியில் சமுத்திரக்கனியிடம் சரண்டர் ஆன ரஜினி…!

By Soundarya on தை 30, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றியை ருசித்தவர். திரைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிகனியை ருசித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

   

இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அரசி மற்றும் இதோ பூபாலன் போன்ற சீரியல்களை இயக்கியது மட்டுமல்லாமல் ஜன்னல் மற்றும் மர்ம தேசம் போன்ற சீரியல்களிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அப்பா மற்றும் சாட்டை போன்ற திரைப்படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றன. தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரு.மாணிக்கம்.

   

 

இந்த படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக் கிறார். படத்துக்கு ‘திரு.மாணிக்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனன்யா இதில் நடிக்கிறார். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பி ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, “அப்பா படம் ரிலீஸ்க்கு ஆகி ஒரு வாரத்தில் கபாலி படம் வந்துவிட்டது. மொத்த தியேட்டரியும் தூக்குறாங்க. வெள்ளி, சனி, ஞாயிறு கபாலி திரைப்படம் ஓடுது. திங்கள்கிழமை அபிராமி தியேட்டரில் திரும்ப அப்பா போடுறாங்க. உடனே நான் போன் பண்ணி ராமநாதன் சார் கிட்ட ஐயா ரொம்ப நன்றின்னு சொன்னேன். அவரு எதுக்கு சொல்றன்னு கேட்டாரு.என்னுடைய கவுண்டரில் அப்பா டிக்கெட் குடு குடு ன்னு கேக்குறாங்க. அதனால எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சி அதனால தான் போட்டேன் என்கிறார். படம் தன வீரியத்தை காட்டும் அது தான் நடக்குது” என்று கூறியுள்ளார்.