ஹரியானாவின் குருக்ஷேத்திர மாவட்டம் ஷாபாத் பகுதியில் உள்ள அரசு பெட்ரோல் பங்கில், வெர்னா காரில் வந்த ஒருவர் ரூ 3500-க்கு டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் தப்பியோட முயன்றார். கையில் பணம் வைத்திருந்ததால் ஊழியருக்கு முதலில் சந்தேகம் வரவில்லை, ஆனால் டீசல் போட்டவுடன் பணத்தை தராமல் காரை ஸ்டார்ட் செய்ததால், உஷாரான சேல்ஸ்மேன் காரின் கதவைத் திறந்து உள்ளே ஏறிக்கொண்டார். இதைப் பொருட்படுத்தாத டிரைவர், ஊழியரின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.
காரின் உள்ளே சென்ற பிறகும், பணத்தைப் பறிக்க சேல்ஸ்மேனுக்கும் டிரைவருக்கும் இடையே கடும் கைக்கலப்பு ஏற்பட்டது. காரை நிறுத்தும்படி ஊழியர் பலமுறை கெஞ்சியும், டிரைவர் ஒரு கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்துக்கொண்டு காரின் வேகத்தை மேலும் அதிகரித்தார்; காரின் முன்னும் பின்னும் எண்களும் (நம்பர் பிளேட்) இல்லை. சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை ஊழியரை காரிலேயே கடத்திச் சென்ற அந்த நபர், இறுதியில் ஓடும் காரில் இருந்து அவரை வெளியே தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காயமடைந்த சேல்ஸ்மேன் நடந்த விபரங்களைக் கூறி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார், அதன் அடிப்படையில் குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…
தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…