மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகை சாய்பல்லவி. தமிழில் அவர் மாரி 2 என்ஜிகே போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்த பிறகு அவரது இமேஜ் எகிறியது. இந்த படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பாராட்டை பெற்றது.
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தனது சம்பளத்தை ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தியதாக தகவல் வெளியானது. இப்போது இந்தியில் இராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வரும் சாய்பல்லவி தமிழில் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தில் நடிகை சாய்பல்லவி ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த படத்தில் அவர் நாயகியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 10 கோடி வரை அவர் சம்பளம் கேட்டதால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிர்ந்து போயுள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில்தால் அமரன் படத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
