Categories: சினிமா

விஜய் என்ன பெரிய சூப்பர் ஸ்டாரா.. உண்மைய பேசுறதுல எனக்கு பயம் இல்ல.. மேடையில் வெளிப்படையாக பேசிய விஜயின் தந்தை SAC..

Spread the love

’துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘தீபாவளி’ உட்பட பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் எழில். இவர் கடந்த 2013-ம் ஆண்டு விமல், பிந்து மாதவி, சூரி உட்பட பலர் நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா என்ற திரைப்படத்தை இயக்கினார். காமெடி படமாக உருவாகியிருந்த இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 11வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் எழில். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

#image_title

இதில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்போது இருக்கும் சில இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்து தாங்களும் பெரிய இயக்குநர்களாகி விடுகின்றனர் என்றும் கதை, திரைக்கதையை யாரும் மதிப்பதில்லை என சாடியுள்ளார்.

“என்னிடம் கதை சொல்பவர்களிடம் நான் குறை சொல்லமாட்டேன். சாதாரணமான பார்வையாளனாக இருந்து என் மனதில் இருக்கும் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்பேன். படம் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக இதைச் செய்வேன் எனக் கூறிய சந்திரசேகர், இப்போதெல்லாம் யாரும் கதை திரைக்கதைக்கு மரியாதைக் கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும் எப்படியும் ஒரு படத்தை எடுத்து வெற்றியடைந்து விடலாம். இப்போ இருக்க பார்வையாளர்களும் ஹீரோவுக்காகப் படம் பார்க்கப் பழகிவிட்டார்கள். படத்தின் கதை, திரைக்கதை பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. ஹீரோவுக்காகப் படம் ஓடிவிடுகிறது. அதனால் அந்த இயக்குநரும் பெரிய இயக்குநாராக மாறிவிடுகிறார்கள் என கூறினார்.

#image_title

சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு அந்த இயக்குநருக்குக் கால் பண்ணிப் பேசினேன். படத்தின் முதல் பாதி சூப்பர் என்று பாராட்டிப் பேசினேன். இரண்டாம் பாதியில் சில குறைகள் இருக்கிறது என்றேன். பாராட்டிப் பேசியதைக் காது கொடுத்துக் கேட்டவர், குறைகளைச் சொல்ல ஆரம்பத்தவுடனே ‘சாப்பிட்டுட்டு இருக்கேன் சார். அப்புறமா கூப்பிடுறேன்’ என்று போனைக் கட் செய்துவிட்டார். அதன்பிறகு கூப்பிடவே இல்லை என குற்றம்சாட்டினார்.

#image_title

விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனம் துள்ளும் படத்தின் போது, கதையை கேட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் எழிலிடம் ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு அவர் படம் மூலமே பதிலளித்ததாகவும் கூறியுள்ளார். இயக்குநரின் அந்தப் பக்குக்வதம் தான் அவரை வாழ்வில் மேம்படுத்தியதாகவும், அப்படம் வெளியான போது விஜய் ஒன்றும் சூப்பர் ஸ்டார் இல்லை எனவும், ஆனால் படத்தின் கதை திரைக்கதை அப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியதாகவும், அப்படம் வெளியாகி வெற்றியான பிறகு தான் மலையாளத்தில் விஜய்க்கு ரசிகர்கள் உண்டானதாகவும் தெரிவித்தார்.

Archana

Recent Posts

“எவன் கூட டீ கள்ளத்தொடர்பு?”…. விஷம் குடிக்க மறுத்த மனைவி… கதறிய 3 வயது குழந்தை…. பழனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!

குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…

8 minutes ago

“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…

16 minutes ago

BREAKING: அதிமுகவில் மேலும் 5 பேர் ராஜினாமா செய்தனர்…. EPS-ஐ அதிரவைத்த மாஜி அமைச்சர்களின் மூவ்…. உச்சக்கட்ட பரபரப்பு….!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…

21 minutes ago

வைகோ சொன்ன ‘அந்த’ ரகசியம்.. திமுகவின் அடுத்த மூவ்…. தவெக-வை வீழ்த்த ஸ்டாலின் போட்ட ரகசிய கணக்கு… அம்பலமான அரசியல் வியூகம்….!

தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…

30 minutes ago

“பதவியும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்”…. EPS முகத்தில் காகிதத்தை எறிந்த 9 மூத்த தலைவர்கள்… கதிகலங்கிப் போன எடப்பாடி…. விடிய விடிய நடந்த சதி….!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…

36 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

1 மணத்தியாலம் ago