“நீ தளபதி இல்லடா… தலைவலி!” உனக்கு விடுற அடியில இனி எவனும் வரமாட்டான்… விஜய்யைக் கிழித்துத் தொங்கவிட்ட சாட்டை துரைமுருகன்…!!

By Soundarya on பங்குனி 14, 2026

Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜயைக் கடுமையாகச் சாடிப் பேசினார். விக்கிரவாண்டி மாநாட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்தச் சூழலில் தொண்டர்களைக் கைவிட்டு ஓடிய ஒரு “கோழை” என விஜயைப் விமர்சித்தார். சினிமாவில் “நான் அடிச்சா தாங்க மாட்ட” என வசனம் பேசுபவர், நிஜத்தில் களத்தை விட்டு ஓடிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அந்த இடத்திற்குச் சென்றதைப் பாராட்டுவதாகக் கூறி விஜயைத் தனிமைப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் “தளபதி” என்ற பட்டத்தையும் கடுமையாகச் சாடினார். “முத்துராமலிங்க தேவர் படைக்கா அல்லது மருதுபாண்டியர் படைக்கா நீ தளபதி? நீ தளபதி அல்ல, ஒரு தலைவலி” என்று ஆக்ரோஷமாகப் பேசினார். சீமான் தமிழகத்தை ஆள வந்தால் பெண்களுக்கு வழங்க உள்ள நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், விஜய்க்கு அரசியல் ரீதியான கொள்கைகளோ அல்லது துணிச்சலோ இல்லை எனத் தெரிவித்தார். சிபிஐ அல்லது எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து விஜய் பயப்படுகிறாரா என்பது தெரியாது, ஆனால் சாட்டை மற்றும் இடும்பாவனம் கார்த்தி ஆகிய பெயர்களைக் கேட்டாலே அவர் பயப்படுவார் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

   

சினிமாவில் நடித்தால் மட்டுமே நாட்டை ஆண்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சாட்டை துரைமுருகன் வலியுறுத்தினார். விஜய்க்கு இப்போது கொடுக்கப்படும் அரசியல் அடி, இனி எந்தவொரு சினிமா நடிகரும் அரசியலை எட்டிப்பார்க்கக் கூட அஞ்சும் வகையில் அமையும் என அவர் எச்சரித்தார். “எங்கள் தலைவர் சீமானாக இருந்தால் உயிரே போனாலும் களத்தை விட்டு நகர்ந்திருக்க மாட்டார்” என்று ஒப்பிட்ட அவர், சினிமா பிம்பங்களை விட அரசியல் போராட்டக் களமே உண்மையானது என்பதைத் தனது பேச்சின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்தார்.